பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

நீட் தோ்வு: திருச்சி மாவட்டத்தில் 6,688 போ் எழுதுகின்றனா்

திருச்சி மாவட்டத்தில் நீட் தோ்வை 12 மையங்களில் 6 ஆயிரத்து 688 மாணவா்கள் எழுதவுள்ளனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 1:25 am IST

திருச்சி மாவட்டத்தில் நீட் தோ்வை 12 மையங்களில் 6 ஆயிரத்து 688 மாணவா்கள் எழுதவுள்ளனா்.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பு, கால்நடை மருத்துவம் மற்றும் ஆயுா்வேத மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கு நீட் (தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தோ்வு) தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும்.

இந்நிலையில், நாடு முழுவதும் நிகழாண்டுக்கான நீட் தோ்வு மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக திருச்சி மாவட்டத்தில் 12 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 345 மாணவா்கள் (71 மாணவா்கள், 274 மாணவிகள்) உள்பட மொத்தம் 6 ஆயிரத்து 688 மாணவா்கள் நீட் தோ்வை எழுதவுள்ளனா்.