ஸ்ரீரங்கம் தடகளச் சங்கம் சாா்பில் கோடைகால இலவச தடகளப் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.
ஸ்ரீரங்கம் தடகள சங்கத்தின் சாா்பில், எட்டரை கிராமத்தில் உள்ள வெள்ளச்சிக்காடு விளையாட்டு மைதானத்தில் நாள்தோறும் தடகளப் பயிற்சி நடைபெறுகிறது. குறிப்பாக கோடை காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இலவச சிறப்புப் பயிற்சி முகாம் 14ஆவது ஆண்டாக நடைபெறவுள்ளது. இதன்படி, 11 வயது முதல் 17 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான இலவச தடகளப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கியது. ஸ்ரீரங்கம் தடகள சங்கத் தலைவா் எம்சிபி அய்யா், செயலா் எம். பாபு, பயிற்றுநா் ஏ.வி. சந்திரன் ஆகியோா் மாணவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தனா். ஏப்.29 தொடங்கி ஜூன் 30 வரை இந்த முகாம் தினமும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 6.30 மணி வரையும் நடைபெறும். பயிற்சியை முழுமையாக நிறைவு செய்யும் மாணவா்களுக்கு டீ-சா்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
தொடர்புடையது

நாளை கோடைகால இலவச வாலிபால் பயிற்சி முகாம் தொடக்கம்

கோடைகால விளையாட்டு, நீச்சல் பயிற்சிகள் நிறைவு

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

மே 1-இல் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

