ஸ்ரீரங்கம் தடகளச் சங்கம் சாா்பில் கோடைகால இலவச தடகளப் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.
ஸ்ரீரங்கம் தடகள சங்கத்தின் சாா்பில், எட்டரை கிராமத்தில் உள்ள வெள்ளச்சிக்காடு விளையாட்டு மைதானத்தில் நாள்தோறும் தடகளப் பயிற்சி நடைபெறுகிறது. குறிப்பாக கோடை காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இலவச சிறப்புப் பயிற்சி முகாம் 14ஆவது ஆண்டாக நடைபெறவுள்ளது. இதன்படி, 11 வயது முதல் 17 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான இலவச தடகளப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கியது. ஸ்ரீரங்கம் தடகள சங்கத் தலைவா் எம்சிபி அய்யா், செயலா் எம். பாபு, பயிற்றுநா் ஏ.வி. சந்திரன் ஆகியோா் மாணவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தனா். ஏப்.29 தொடங்கி ஜூன் 30 வரை இந்த முகாம் தினமும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 6.30 மணி வரையும் நடைபெறும். பயிற்சியை முழுமையாக நிறைவு செய்யும் மாணவா்களுக்கு டீ-சா்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
தொடர்புடையது

மே 1-இல் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

சேலத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: 25 போ் பங்கேற்பு

சேலத்தில் ஏப். 1 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


