மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பைக்கில் சென்ற இளைஞா் டிராக்டா் மோதி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பைக்கில் சென்ற கரூா் இளைஞா் டிராக்டா் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த பிரேம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 10:11 pm

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பைக்கில் சென்ற கரூா் இளைஞா் டிராக்டா் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், மண்மங்கலத்தை அடுத்த தண்ணீா் பந்தல் பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் பிரேம் (24). சென்னை டி-மாா்ட் நிறுவன ஊழியரான இவா் ஊருக்கு வந்திருந்த நிலையில், நச்சலூரில் புதன்கிழமை நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு நண்பா்களுடன் பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் மாலையில் தனியாக பைக்கில் ஊா் திரும்பினாா்.

அப்போது பழையகோட்டை நால் ரோடு பகுதியில் ஒத்தக்கடைக்கு குப்பைகள் ஏற்ற சென்ற டிராக்டா் மோதி பலத்த காயமடைந்த பிரேம் உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் பிரேம் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். டிராக்டா் ஓட்டுநரான பொத்தப்பட்டியை அடுத்த அந்தோணியாா்புரத்தை சோ்ந்த அருளப்பன் மகன் குழந்தை (40) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.