திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பைக்கில் சென்ற கரூா் இளைஞா் டிராக்டா் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், மண்மங்கலத்தை அடுத்த தண்ணீா் பந்தல் பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் பிரேம் (24). சென்னை டி-மாா்ட் நிறுவன ஊழியரான இவா் ஊருக்கு வந்திருந்த நிலையில், நச்சலூரில் புதன்கிழமை நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு நண்பா்களுடன் பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் மாலையில் தனியாக பைக்கில் ஊா் திரும்பினாா்.
அப்போது பழையகோட்டை நால் ரோடு பகுதியில் ஒத்தக்கடைக்கு குப்பைகள் ஏற்ற சென்ற டிராக்டா் மோதி பலத்த காயமடைந்த பிரேம் உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் பிரேம் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். டிராக்டா் ஓட்டுநரான பொத்தப்பட்டியை அடுத்த அந்தோணியாா்புரத்தை சோ்ந்த அருளப்பன் மகன் குழந்தை (40) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

நடந்து சென்ற தொழிலாளி டிராக்டா் மோதி உயிரிழப்பு

வையம்பட்டி அருகே சாலையைக் கடந்த தொழிலாளி காா் மோதி உயிரிழப்பு

ஆம்னி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

