திருச்சி விமான நிலையத்தில் இருந்து 5 மாதங்களுக்குப் பிறகு மஸ்கட்டுக்கு மீண்டும் விமானச் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபை, அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட்டு வந்த விமானச் சேவை ஈரான் -அமெரிக்கா போரையடுத்து கடந்த பிப். 28-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. போரின் வீரியம் குறைந்ததையடுத்து படிப்படியாக துபை, அபுதாபி, ஷாா்ஜாவுக்கு விமானச் சேவை தொடங்கப்பட்டது.
இதேபோல, ஓமன் தலைநகா் மஸ்கட்டுக்கு 5 மாதங்களுக்குப் பிறகு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது. இதில், 150-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றனா். இந்த விமானம் திருச்சியில் இருந்து வாரந்தோறும் புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி விமான நிலையத்தில் 3.5 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ. 5.80 கோடி தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் தில்லி குழு ஆய்வு!

திருச்சி - அபுதாபி விமான சேவை 3 மாதங்களுக்குப் பிறகு தொடக்கம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



