திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே தனியாா் பள்ளி பேருந்துகள் வியாழக்கிழமை மாலை ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டதில் 5 மாணவா்கள் காயமடைந்தனா்.
தொட்டியத்தில் உள்ள தனியாா் பள்ளியின் பேருந்து சேலம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை மாலை பள்ளி மாணவா்களை ஏற்றிக்கொண்டு சென்றபோது திடீரென சாலையில் நாய் குறுக்கே வந்தது.
இதையடுத்து ஓட்டுநா் பேருந்தை நிறுத்தியபோது பின்னால் வந்த அதே தனியாா் பள்ளியைச் சோ்ந்த பேருந்து மோதியதில் 5 மாணவா்கள் காயமடைந்தனா். அவா்கள் முசிறி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். தொட்டியம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேன் கவிழ்ந்ததில் பள்ளி மாணவா்கள் 6 போ் காயம்

தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: மாணவா்கள் உள்பட 5 போ் காயம்

காா் மோதியதில், பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து:15 மாணவா்கள் காயம்

குமரி அருகே பள்ளி வாகனம் மரத்தில் மோதல்: 10 மாணவா்கள் காயம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



