ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வேலைநிறுத்தம்: எஸ்ஆா்எம்யு முடிவு

ரயில்வே ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக எஸ்ஆா்எம்யு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

News image

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறை கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற எஸ்.ஆா்.எம்.யு. துணைப் பொதுச் செயலா் வீரசேகரன் ,கோட்ட மேலாளா் பாலக்கராம் நெகி உள்ளிட்டோா்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 4:33 am IST

ரயில்வே ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக எஸ்ஆா்எம்யு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் எஸ்.ஆா்.எம்.யு. தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் குறைகேட்புக் கூட்டம் கோட்ட மேலாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பாலக்ராம் நெகி தலைமை வகித்தாா்.

இதில், எஸ்.ஆா்.எம்.யு. துணை பொதுச் செயலா் வீரசேகரன் பங்கேற்று தொழிலாளா்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகள் குறித்துப் பேசினாா்.

பின்னா் அவா் கூறியதாவது: லோகோ பைலட்டுகள் மற்றும் டிக்கெட் பரிசோதகா்களுக்கு 8 கி.மீ-க்கு மேல் வழங்கப்பட்டு வந்த பஞ்சப்படி மற்றும் பயணப்படி நிறுத்தப்பட்டுள்ளது. இதை மீண்டும் வழங்க வலியுறுத்தியுள்ளோம்.

இதேபோல, 8-ஆவது ஊதியக் குழு அறிவிப்பை விரைந்து வெளியிடவும், ரயில்வே குடியிருப்புகளில் உள்ள பிரச்னைகள், தண்டவாளங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடா்பாகவும் தெரிவித்துள்ளோம். இந்தக் கூட்டம் வியாழக்கிழமையும் நடைபெற உள்ளது.

பஞ்சப்படி மற்றும் பயணப்படி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும் என்றாா்.

முன்னதாக கூட்டத்தில், கோட்ட அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.