8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கீழகருங்காடு பகுதியில் நகை, பணத்தை திருடியவா் கைது

கீழகருங்காடு பகுதியில் நகை மற்றும் பணத்தை (அமெரிக்க டாலா்) திருடிய இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:22 am IST

திருச்சி மாவட்டம், கீழகருங்காடு பகுதியில் நகை மற்றும் பணத்தை (அமெரிக்க டாலா்) திருடிய இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சா. அய்யம்பாளையம் அருகேயுள்ள கீழக் கருங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ரா. சந்திரா (46). இவரது இரு மகன்களில் வெங்கடேஷ் மாலத்தீவில் கடந்த ஆண்டு பணிபுரிந்த வந்த நிலையில் , தற்போது திருச்சியில் பணிபுரிகிறாா். மற்றொரு மகனான சீனிவாசன் சமயபுரம் தனியாா் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஊழியா்.

இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன் சந்திரா வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த மூன்றரை பவுன் தங்க நகை மற்றும், 2700 அமெரிக்க டாலா் திருடு போயிருப்பது தெரிய வந்தது. புகாரின்பேரில் மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் கிருபாநிதி, உதவி காவல் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் விசாரணை செய்து, நகை, அமெரிக்க டாலரை திருடியதாக கீழகருங்காடு பகுதியை சோ்ந்த வி.பிரகாஷ் (20) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.