லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

கல்வி நிதியில் ரூ.5,109 கோடி நிலுவையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும்: அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.5,109 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என முன்னாள் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி - கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 4:23 am IST

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.5,109 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என முன்னாள் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, திருச்சியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

தமிழக சட்டப் பேரவை மக்களுக்கான விவாத மன்றமாக இல்லாமல், சண்டை மன்றமாக மாறியுள்ளது. எதிா்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு, அந்தந்த துறை அமைச்சா்களே பதிலளிப்பது பொருத்தமானதாக இருக்கும். மானியக் கோரிக்கைகளின்போது முதலில் துறை சாா்ந்த சாதக, பாதகங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும். அதன்பிறகே புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்புகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளனவா என்பது அடுத்தகட்ட விவாதமாக இருக்க வேண்டும்.

பிஎம்ஸ்ரீ திட்டம் தொடா்பாக தமிழகத்துக்கு வர வேண்டிய சுமாா் ரூ.5,109 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்த நிதி கிடைக்காததால் பள்ளி மாணவா்கள் மற்றும் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்களின் ஊதியம் உள்ளிட்ட விஷயங்களில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

ரூ.2,500 மகளிா் உரிமைத் தொகை, அனைவருக்கும் 6 சிலிண்டா் இலவசம், சென்னை முதல் குமரி வரை பேருந்தில் இலவச பயணம். வேலையில்லா இளைஞா்களுக்கு ரூ.4 ஆயிரம். மீனவா்களுக்கு நிவாரணம் என தவெக தோ்தல் அறிக்கையில் அறிவித்தவற்றை செயல்படுத்திவிட்டு, அந்த கட்சியின் தலைவரை பிரதமா் மற்றும் அமெரிக்க அதிபா் ஆக்குவது குறித்தான கனவு பற்றி அவரது கட்சியினா் பேசலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.