நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

தமிழகத்துக்கான கல்வி நிதி: மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: மாணிக்கம் தாகூா்

தமிழகத்துக்கான கல்வி நிதி ரூ.5,109 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தியுள்ளாா்.

மாணிக்கம் தாகூா்

Published On :28 ஆகஸ்ட் 2026, 4:31 am IST

தமிழகத்துக்கான கல்வி நிதி ரூ.5,109 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக பள்ளிக் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, 2024-2025-ஆம் நிதியாண்டில் ரூ.1,788 கோடி, 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ.1,496 கோடி, நடப்பு நிதியாண்டில் ரூ.1,825 கோடி என மொத்தம் ரூ.5,109 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பெயரளவுக்கு கல்வி உரிமைச் சட்டத் திட்டத்துக்கு ரூ.714 கோடியை மட்டும் விடுவித்துள்ளது. மத்திய அரசின் நிதி உதவி இல்லாத போதிலும், தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2,014 கோடியையும், நடப்பாண்டில் ரூ.647 கோடியையும் ஒதுக்கி பள்ளிகளை நடத்தி வருகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் அரசுப் பள்ளி மாணவா்களின் கற்றல் திறன் மேம்பாடு, ஆசிரியா் பயிற்சிகள் மற்றும் பள்ளிக் கட்டமைப்பு பணிகள் கடுமையான நெருக்கடிக்குள்ளாகி வருகின்றன.

எனவே, தமிழகத்துக்கான ரூ.5,109 கோடி கல்வி நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.