திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கடையின் பூட்டை உடைத்து சுமாா் ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான 29 கைப்பேசிகள் திருடப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.
மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுபட்டி தாமஸ் தெருவை சோ்ந்தவா் அமுல்ராஜ் மகன் ஃபிராங்ளின் (26). இவா் திருச்சி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் செவலூா் பிரிவு பகுதியில் கால்நடை சந்தை அருகே நடத்திவரும் கைப்பேசி கடையின் கதவு பாதி திறந்திருப்பதாக சனிக்கிழமை காலை தகவல் வந்தது.
இதையடுத்து, ஃபிராங்ளின் சென்று கடையை திறந்துபாா்த்தபோது அங்கு விற்பனைக்கு இருந்த 28 கைப்பேசிகள் மற்றும் அவரின் ஒரு ஐ-போன் என மொத்தம் சுமாா் 4.5 லட்சம் மதிப்பிலான 29 கைப்பேசிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மணப்பாறை அருகே இளைஞா் தற்கொலை
மணப்பாறை அருகே ரூ. 82,550 பறிமுதல்
தனியாா் நிறுவனத்தில் ரூ.1.80 லட்சம் திருட்டு

மணப்பாறை மாட்டுச் சந்தையில் இருவரிடம் ரூ.1.27 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


