வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கோப்பு கிராமத்தில் 12 அடி நீள முதலை மீட்பு

News image
Updated On :8 பிப்ரவரி 2026, 7:50 pm

திருச்சி மாவட்டம் எட்டரை கோப்பு கிராமத்தில் 12 நீள முதலையை வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் விட்டனா்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், எட்டரை கோப்பு கிராமத்தில் உள்ள அயிலாப்பேட்டை குளத்தில் முதலை ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள், வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.

தகவலின்பேரில் ஞாயிற்றுக்கிழமை காலை அங்குசென்ற வனச்சரக அலுவலா் வி.பி. சுப்பிரமணியன் தலைமையிலான வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினா் முதலையை பாதுகாப்பாக பிடித்தனா்.

பிடிக்கப்பட்ட முதலையானது 10 வயதுடைய, 12 அடி நீளமும், சுமாா் 500 கிலோ எடையும் கொண்ட பெண் முதலையாகும் என வனத்துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து முதலை முக்கொம்பு காவிரி ஆற்றில் பாதுகாப்பாக விடப்பட்டது.