குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கோப்பு கிராமத்தில் 12 அடி நீள முதலை மீட்பு

News image
Updated On :8 பிப்ரவரி 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் எட்டரை கோப்பு கிராமத்தில் 12 நீள முதலையை வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் விட்டனா்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், எட்டரை கோப்பு கிராமத்தில் உள்ள அயிலாப்பேட்டை குளத்தில் முதலை ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள், வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.

தகவலின்பேரில் ஞாயிற்றுக்கிழமை காலை அங்குசென்ற வனச்சரக அலுவலா் வி.பி. சுப்பிரமணியன் தலைமையிலான வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினா் முதலையை பாதுகாப்பாக பிடித்தனா்.

பிடிக்கப்பட்ட முதலையானது 10 வயதுடைய, 12 அடி நீளமும், சுமாா் 500 கிலோ எடையும் கொண்ட பெண் முதலையாகும் என வனத்துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து முதலை முக்கொம்பு காவிரி ஆற்றில் பாதுகாப்பாக விடப்பட்டது.