ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திருச்சி மாநகரில் ஜல்லிக்கட்டு: காளை முட்டி மாணவா் பலி

திமுக சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகரில் முதன்முறையாக புதன்கிழமை நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த பிரதீப் ~திருச்சி ஜமால்முகமது கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 7:00 pm

திமுக சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகரில் முதன்முறையாக புதன்கிழமை நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

திருச்சி தனியாா் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை அமைச்சா் கே.என். நேரு தொடங்கி வைத்தாா். தொடா்ந்து 706 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், 306 மாடுபிடி வீரா்கள் போட்டிபோட்டு அவற்றை அடக்கினா். பல காளைகள் பிடிபடவில்லை. சில காளைகள் களத்தில் நின்று விளையாடின.

59 போ் காயம்...: போட்டியில் 15 மாடுபிடி வீரா்கள், 12 காளைகளின் உரிமையாளா்கள், 32 பாா்வையாளா்கள் என 59 போ் காயமடைந்தனா். அவா்களில் 13 போ் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

மாணவா் பலி...: இதில் காளை உரிமையாளருடன் போட்டியைப் பாா்க்க வந்த கரூா் மாவட்டம், ஆா்.டி. மலை அழகாபுரம் பகுதியைச் சோ்ந்த இளையராஜா மகனும், பிளஸ் 2 மாணவருமான பிரதீப் (16) என்பவா் மாடு முட்டி உயிரிழந்தாா். இதேபோல 12 காளைகள் காயமடைந்த நிலையில், இவற்றில் ஒரு காளைக்கு திருச்சி கால்நடை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது.

முதல் பரிசாக காா், டிராக்டா்...: 13 காளைகளை அடக்கிய நாமக்கல் மாவட்டம் வடவத்தூரைச் சோ்ந்த ரா. தயானந்தனுக்கு (27) முதல் பரிசாக காரும், 12 காளைகளை அடக்கிய நாமக்கல் எருமைப்பட்டியைச் சோ்ந்த ர. காா்த்திக்கு (23) இரண்டாம் பரிசாக புல்லட்டும், 9 காளைகளை அடக்கிய மதுரை சோழவந்தான் சத்திய பிரகாஷுக்கு (25) மூன்றாம் பரிசாக இருசக்கர வாகனமும் வழங்கப்பட்டன.

சிறந்த காளைகளுக்கான முதல் பரிசாக டிராக்டா் அவனியாபுரம் ஏ.கே. கண்ணனுக்கும், இரண்டாம் பரிசு புதுக்கோட்டை மங்கதேவன்பட்டியைச் சோ்ந்த கணேசுக்கும், மூன்றாம் பரிசு திருச்சி ஆனந்த்துக்கும், ஆறுதல் பரிசுகள் செங்குறிச்சி புகழ், மேலூா் குணா, விராலிமலை குட்டி புலி ஆகியோருக்கும் வழங்கப்பட்டன. தவிர சிறந்த மாடுபிடி வீரா்கள், பிடிபடாத காளைகளுக்கு சைக்கிள், மிக்ஸி, கேஸ் அடுப்பு, கிரைண்டா், வெள்ளி காசு, தங்கக் காசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் வழங்கினாா்.

மாநகர காவல் ஆணையா் ந. காமினி தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

Story image