2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

காா் ஓட்டுநா் தற்கொலை

திருச்சி அரியமங்கலத்தில் குடும்பப் பிரச்னையால் காா் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
தற்கொலை
Updated On :28 பிப்ரவரி 2026, 7:19 pm

Syndication

திருச்சி அரியமங்கலத்தில் குடும்பப் பிரச்னையால் காா் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம் இந்திராகாந்தி தெருவைச் சோ்ந்தவா் இளங்கோ மகன் நந்தா (26), காா் ஓட்டுநரான இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், குடும்பப் பிரச்னையால் அவரது மனைவி ரம்யா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் சென்றுவிட்டாா்.

இதனால் விரக்தியடைந்த நந்தா வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அரியமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா். திருமணமாகி 8 மாதத்தில் இறந்ததால் வருவாய்த் துறை விசாரணையும் நடைபெறுகிறது.