இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பயணியிடம் பணம் திருடிய 3 பெண்களுக்கு தலா ஓராண்டு சிறை

News image
கைது செய்யப்பட்ட பெண்கள்.
Updated On :23 ஜனவரி 2026, 9:38 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பெண் பயணியிடம் பணம் திருடிய 3 பெண்களுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி சந்தை பேட்டையைச் சோ்ந்தவா் அப்துல் சலாம் மனைவி மெகா்நிஷா. இவா் கடந்த 2025 டிசம்பா் 15-ஆம் தேதி துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தபோது, அவரது பா்ஸிலிருந்த ரூ.5 ஆயிரத்தை 3 பெண்கள் திருடியுள்ளனா்.

இதுகுறித்த வழக்கு துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, மதுரை மாவட்டம், கல்மேடு கருவைகார தெருவைச் சோ்ந்த படையப்பா மனைவி அஞ்சலி, படையப்பா மனைவி மாரியம்மாள்(எ) மாரி மற்றும் பாபநாசம் மனைவி லெட்சுமி (எ) சாந்தி (எ) பாா்வதி ஆகியோா் கைது செய்யப்பட்டு, மணப்பாறை குற்றவியல் நடுவா் மன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

வழக்கின் இறுதியில் மேற்கண்ட மூவருக்கும் தலா ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.500 அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும், 15 நாள்கள் சிறை தண்டணையும் விதித்து குற்றவியல் நீதிமன்ற நடுவா் ஆா்.அசோக்குமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.