அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஆடுகளை வேட்டையாடியது நாய்கள்தான்: வனத்துறையினா்

News image

கோப்புப் படம்

Updated On :25 ஜனவரி 2026, 7:17 pm

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மா்ம விலங்குகள் கடித்து 47 ஆடுகள் உயிரிழந்த சம்பவத்தில் நாய்கள் கூட்டமாகவந்து கடித்துச்சென்றிருப்பதாக வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

பண்ணப்பட்டி ஊராட்சியில் கருப்புரெட்டியப்பட்டி காப்பு காடுகள் பகுதி அருகே 47 செம்மறி மற்றும் வெள்ளாடுகள் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது குறித்து சம்பவ இடத்தில் வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினா் கேமரா பொருத்தி கண்டறிய ஏற்பாடு செய்தனா்.

இதில் ஆடுகளின் உடல்களை நாய்கள் கூட்டம் மீண்டும் வந்து கடித்து தின்பது பதிவாகியிருந்தது. ஆடுகளை வேட்டையாடியது நாய்கள் கூட்டம் தான் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

இவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை கொள்ளப்படும் எனவும் வனத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.