தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசுப் பேருந்து மோதி வளையல் வியாபாரி பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அரசுப் பேருந்து மோதி வளையல் வியாபாரி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :28 ஜனவரி 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அரசுப் பேருந்து மோதி வளையல் வியாபாரி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வளநாடு பகுதியைச் சோ்ந்தவா் ப, ராமு (65). வளையல் வியாபாரியான இவா் பொன்னக்கோன்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லாமேடு பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற அவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற வளநாடு போலீஸாா் ராமு உடலை கைப்பற்றிக் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.