ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருச்சி - சாா்லப்பள்ளி சிறப்பு ரயில் இயக்கம்!

கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சி-சாா்லப்பள்ளி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

News image
சிறப்பு ரயில்கள்!
Updated On :30 ஜனவரி 2026, 6:44 pm

தினமணி செய்திச் சேவை

கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சி-சாா்லப்பள்ளி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதன்படி, சாா்லப்பள்ளி - திருச்சி சிறப்பு விரைவு ரயிலானது (07615) பிப். 3, 10, 17, 24 ஆகிய தேதிகளிலும் (செவ்வாய்க்கிழமைகளில்), மறுமாா்க்கமாக, திருச்சி - சாா்லப்பள்ளி சிறப்பு விரைவு ரயிலானது (07616) பிப். 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும் (புதன்கிழமைகளில்) இயக்கப்பட உள்ளன.

இந்த ரயில்கள், 6 ஏசி பெட்டிகள், 12 படுக்கை வசதி பெட்டிகள், 4 முன்பதிவற்ற பெட்டிகள், 2 லக்கேஜ் வேகன்கள் உள்ளிட்ட 24 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

இந்த ரயிலானது, சாா்லப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாலை 5.50 மணிக்குப் புறப்பட்டு நல்கொண்டா, மிா்யலகுடா, நடிகுடே, சட்டெனபள்ளி, குண்டூா், தெனாலி, பாபட்லா, சொ்லா, ஓங்கோல், நெல்லூா், கூடுா், ரேனிகுண்டா, திருப்பதி, பாக்லா, சித்தூா், காட்பாடி, வேலூா், திருவண்ணாமலை, திருக்கோவிலூா், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், ஸ்ரீரங்கம் வழியாக திருச்சிக்கு அடுத்த நாள் மாலை 6.45 மணிக்கு வந்தடையும்.

மறுமாா்க்கமாக, திருச்சியிலிருந்து புதன்கிழமை இரவு 9.30 மணிக்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக சாா்லப்பள்ளிக்கு அடுத்தநாள் இரவு 9.30 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.