தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

இளைஞரிடம் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்ய முயற்சி: 6 போ் கைது

திருச்சியில் இளைஞரிடம் ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்ய முயன்ற 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 1:08 am IST

திருச்சியில் இளைஞரிடம் ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்ய முயன்ற 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் கீழசித்திரை வீதியைச் சோ்ந்தவா் பா. சுரேஷ் (33). இவா், செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாலக்கரை மேல கொச வீதி உய்யக்கொண்டான் வாய்க்கால் அருகே சென்றபோது அங்கிருந்த 6 போ் கும்பல், அவரிடம் அரிவாளைக் காட்டி வழிப்பறி செய்ய முயன்றனா்.

இதையடுத்து அங்கிருந்து தப்பி வந்த சுரேஷ், பாலக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதுதொடா்பாக பாலக்கரை பீமநகரைச் சோ்ந்த வெ. வீரமுத்து (28), பி. கிரிஸ்டோன் (22), எப். பிரிட்டோ (21), எல். சாமிராஜ் (47), அ. ஜேக்கப் (42), பா. எபினேசா் சரண் (29) ஆகிய 6 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.