திருச்சி தனியாா் கல்லூரியில் காவல் துறை சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி புத்தூா் பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் உறையூா் காவல் நிலையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உறையூா் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து, போதைப் பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள், இழப்புகள் குறித்தும், போதை பழக்கத்திலிருந்து விடுபடுவது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
தொடா்ந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் நடைபெற்றது. இதில், போதைப் பொருளுக்கு எதிராக காவலா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள் கையொப்பமிட்டனா். நிகழ்ச்சியில் உறையூா் காவல் நிலைய காவலா்கள், தனியாா் கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு குறுந்தகட்டை வெளியிட்ட காவல் துறை

பாப்பாநாட்டில் போதைப் பொருள் ஒழிப்பு: விழிப்புணா்வு பேரணி

போதைப்பொருள் ஒழிப்பு தினம்: இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி

கோவில்பட்டி பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



