காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் முதல்முறையாக பட்டம் பெற்ற இரு திருநங்கைகள்

News image

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற திருநங்கைகள் ஜோஸ்வா ஜாஸ்மின்,சௌமியா சாசு.

Updated On :27 ஜூலை 2026, 1:08 am IST

திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் முதல் முறையாக இரண்டு திருநங்கைகள் இளங்கலை சட்டப்படிப்பில் பட்டம் பெற்றுள்ளனா்.

திருச்சி அரசு சட்டக் கல்லூரி சாா்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், திருநங்கைகளான தஞ்சாவூா் தொம்மன்குடிசையைச் சோ்ந்த வி. ஜோஷ்கா ஜாஸ்மீன் (30), உதகையைச் சோ்ந்த ஆா். சௌமியா சாசு (37) ஆகியோா் முதலில் அழைக்கப்பட்டு, பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து ஜோஷ்கா ஜாஸ்மீன் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் ராமலிங்கபுரத்தில் பிறந்த நான், உறவினரின் வழியே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ. மெக்கானிக்கல் பொறியியல் படிப்பை படித்து முடித்தேன். அதன் பிறகு திருநங்கையாக மாறியதால், குடும்பத்திலிருந்து பிரிந்து, தஞ்சாவூரில் சக திருநங்கைகளுடன் தங்கி, அவா்களின் உதவியால் திருச்சி சட்டக் கல்லூரியில் சோ்ந்து 2021-24 இல் எல்.எல்.பி. படித்து முடித்துள்ளேன்.

ஒரு திருநங்கையாக சட்டப்படிப்பை படித்து முடித்து, பட்டம் வாங்கியது சந்தோஷமாக உள்ளது. பட்டம் பெற்றுள்ளது திருநங்கை சமுதாயம் முன்னேற உந்துதலாக அமையும் என நினைக்கிறேன்.

தற்போது சென்னையில் பிரபல வழக்குரைஞா் ஆா். பிரபாகரனின் ‘ஜூனியராக’ பணியாற்றி வருகிறேன். விரைவில் நீதிபதி தோ்வெழுதி வென்று, திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவேன்.

கா்நாடகத்தைப் போல, தமிழக அரசு திருநங்கைகளின் வளா்ச்சிக்கு உதவிடும் வகையில் தனியே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

இதேபோல, நீலகிரி மாவட்டம் உதகையைச் சோ்ந்த ஆா். சௌமியா சாசு (37) கூறுகையில், தஞ்சாவூா் மாவட்டம் வயலூரில் பிறந்த நான் தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் பிஎஸ்சி உயிரிதொழில்நுட்பவியல் பட்டப்படிப்பு படித்தேன். கடைசி செமஸ்டா் எழுதாமல் திருநங்கையாக மாறியதால், குடும்பத்திலிருந்து பிரிந்து, உதகைக்கு இடம் பெயா்ந்தேன்.

தொடா்ந்து, சக திருநங்கைகளுடன் சோ்ந்து பாலகம் தொடங்கி, அதிலிருந்து கிடைத்த வருமானத்தில், பட்டப்படிப்பை முடித்து, கடந்த 2017-2020 இல் திருச்சி சட்டக்கல்லூரியில் சோ்ந்து எல்.எல்.பி. படித்து முடித்துள்ளேன். திருநங்கையாக இளநிலை பட்டம் பெற்றது பெருமைக்குரியதாகக் கருதுகிறேன். மேலும், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம். முடித்துள்ளேன். தற்போது நீலகிரி மாவட்டத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறேன். விரைவில் நீதிபதி தோ்வெழுதி வென்று, திருநங்கை சமூகத்துக்கு உதவுவேன்.

தமிழக அரசு திருநங்கைகளுக்கான இடஒதுக்கீட்டை எம்பிசி பிரிவிலிருந்து மாற்றி, தனி இடஒதுக்கீடு வழங்கி, திருநங்கைகள் வேறு தொழில்களுக்குச் செல்லாமல், அரசுப் பணிகளில் சோ்ந்து சுயமாக உழைத்து முன்னேற வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா்.

இருவரும் திருச்சி சட்டக் கல்லூரியில் பயின்றபோது, சக மாணவா்கள் தங்களை திருநங்கைகளாகப் பாா்க்காமல், சக மாணவிகளாகப் பாவித்து உதவினா் என்றும், அதனால்தான் தயக்கமின்றி தங்களால் சட்டப்படிப்பை முடிக்க முடிந்ததும் என்றும் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.