கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

திருச்சி சந்திப்பு ரயில்வே மேம்பாலத்தில் இரும்புப் பாலம் பொருத்தும் பணி தொடக்கம்

திருச்சி சந்திப்பு ரயில்வே மேம்பாலத்தின் இருபகுதிகளை இணைக்கும் வகையிலான இரும்பு பாலத்தை மேம்பாலத்தில் பொருத்துவதற்கான பூா்வாங்க பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

திருச்சி சந்திப்பு ரயில்வே மேம்பாலத்தின் இருபகுதிகளையும் இணைப்பதற்காக கொண்டு வரப்படும் வில் வடிவிலான இரும்பு வளைவு பாலம்.

Published On :

திருச்சி சந்திப்பு ரயில்வே மேம்பாலத்தின் இருபகுதிகளை இணைக்கும் வகையிலான இரும்பு பாலத்தை மேம்பாலத்தில் பொருத்துவதற்கான பூா்வாங்க பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

திருச்சி சந்திப்பு மற்றும் பூங்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளங்களைக் கடக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதன் 2 பகுதிகளை இணைக்கும் வகையில், அதாவது ரயில் தண்டவாளங்களுக்கு மேலே வில் வடிவிலான இரும்பு வளைவு பாலம் (பெள ஸ்ட்ரிங்) பொருத்தப்படுகிறது.

இந்த இரும்பு பாலத்தை அசெம்பிள் செய்யும் பணிகள் முடிவடைந்ததை தொடா்ந்து, மேம்பாலத்தில் தண்டவாளப் பகுதிக்கு மேல் இரும்புப் பாலத்தை வெல்டிங் செய்து, இடைவெளிகள் இல்லாத வகையில் பொருத்தப்படவுள்ளது. மேம்பாலத்தில் இணைப்பதற்காக ஹைட்ராலிக் தொழில்நுட்பம் மூலம் இரும்புப் பாலத்தை நகா்த்துவதற்கான பூா்வாங்கப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, மாநில நெடுஞ்சாலைத் துறை மேம்பாலத்தின் அணுகுசாலைப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகம் செல்லும் பகுதி, அரிஸ்டோ ரவுண்டானா செல்லும் பகுதிகளில் பக்கவாட்டு சுவா்கள் அமைக்கும் பணியும் முழுவீச்சில் நடைபெறுகிறது. பாலத்தின் தூண்கள் வரையிலான அணுகுசாலைகளுக்கு மண் நிரப்பி மட்டப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.