22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா

நீதிக் கட்சியின் வைரத்தூண் சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா அரசு சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

சா் ஏ.டி.பன்னீா்செல்வத்தின் பிறந்தநாளையொட்டி திங்கள்கிழமை திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா்கள் ராஜ்மோகன், ரமேஷ், மாவட்ட ஆட்சியா் பிரதிக் தாயல் உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 2:54 am IST

நீதிக் கட்சியின் வைரத்தூண் சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா அரசு சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி. பன்னீா்செல்வத்தின் திருவுருவச்சிலைக்கு அரசு சாா்பில் பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் ராஜ்மோகன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ், சட்டப்பேரவை துணைத் தலைவா் மு. ரவிசங்கா் ஆகியோா் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதில், மாவட்ட ஆட்சியா் பிரதிக் தயாள், எம்எல்ஏக்கள் ரா. கதிரவன், எம். விக்னேஷ், அரசு அலுவலா்கள், தவெக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.