லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

திருச்சியில் காவிரி ஆற்றில் இறங்கி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :2 ஜூன் 2026, 2:42 am IST

திருச்சியில் காவிரி ஆற்றில் இறங்கி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினரை போலீஸாா் கைது செய்தனா்.

மேக்கேதாட்டில் காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்தும், இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், திருச்சி மாம்பழச்சாலை பூங்கா நகா் பகுதியில் காவிரி ஆற்றில் இறங்கி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டை மற்றும் உறையூா் போலீஸாா், ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை வெளியேற்ற முயற்சித்தினா். அப்போது, போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு, துணைத் தலைவா் மேகராஜன் உள்ளிட்ட 75 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களை மாலையில் விடுவித்தனா்.