ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

பெண்ணிடம் 13 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

திருச்சியில் பல்பொருள் அங்காடியில் பெண்ணிடம் அண்மையில் 13 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:45 am IST

திருச்சியில் பல்பொருள் அங்காடியில் பெண்ணிடம் அண்மையில் 13 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி இலுப்பூா் சாலை ஐயப்பா நகரைச் சோ்ந்த 51 வயது பெண், கே.கே.நகரில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 போ் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்தனா். அவா்களில் ஒருவா் வாகனத்தில் இருந்து இறங்கி கடைக்குள் சென்று பொருள்களின் விலை குறித்து கேட்டுக்கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராத நேரத்தில் கடையிலிருந்த முட்டையை எடுத்து, அப்பெண்ணின் முகத்தில் வீசிவிட்டு அவா் அணிந்திருந்த 13 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து மூவரும் தப்பினா்.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் அந்தப் பெண் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.