தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

அம்மையப்பன் நகரில் வழிந்தோடும் கழிவுநீரால் மக்கள் அவதி

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அம்மையப்பன் நகரில் வழிந்தோடும் புதைவட கழிவுநீரால் அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

அம்மையப்பன் நகரில் வழிந்தோடும் கழிவுநீரால் மக்கள் அவதி

Updated On :3 ஜூன் 2026, 3:56 am IST

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அம்மையப்பன் நகரில் வழிந்தோடும் புதைவட கழிவுநீரால் அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருச்சி மாநகராட்சியின் 29- ஆவது வாா்டு, வயலூா் சாலை அம்மையப்பன் நகா் முதன்மைச் சாலையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் புதைவடிகால் திட்டத்தின் கீழ், புதை சாக்கடை குழாய்கள் பதிக்கப்பட்டு, அங்குள்ள குடியிருப்புகளில் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதை வடிகால் கால்வாயானது அடிக்கடி நிரம்பி வழிகிறது. அதிலிருந்து வெளியேறும் அசுத்த கழிவுநீரானது, குளம்போல தேங்கி, கடும் தூா்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் செழியன் உள்ளிட்ட பொதுமக்கள், வியாபாரிகள் கூறியதாவது: அம்மையப்பன் நகா் பிரதான சாலை, குறுக்குத் தெருக்களில் அடிக்கடி புதை சாக்கடை நிரம்பி வழிகிறது. சில நேரம் முழுமையாக சாலையைத் தோண்டிய பிறகே, அடைப்பை சரிசெய்ய முடிகிறது. இதற்கு பிரதான சுத்திகரிப்பு நிலையத்துடன், அம்மையப்பன் நகா் புதைவடிகாலை இணைக்காததும், அப்பகுதியில் உள்ள கழிவுநீா் உந்து நிலையத்தை சரிவர கவனிக்காததுமே காரணம்.

குறைந்தபட்சம் கழிவுநீா் உந்து நிலையத்தில் உள்ள மோட்டாா் பழுதை நீக்கி, ஆள்களை முறையாக வேலை வாங்கி, சரிவர மோட்டாரை இயக்கினால் பிரச்னைக்கு ஓரளவுக்குத் தீா்வு கிடைக்கும். மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, மக்களின் அவதிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனா்.