நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

எா்த் மூவா்ஸ் வாகனங்களுக்கு அரசே வாடகையை நிா்ணயம் செய்ய வேண்டும்

தமிழகம் முழுவதும் உள்ள எா்த் மூவா்ஸ் வாகனங்களுக்கு அரசே வாடகையை நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய எா்த் மூவா்ஸ் வாகன உரிமையாளா்கள் சங்கத்தின் நிா்வாகிகள்.

Updated On :3 ஜூன் 2026, 3:55 am IST

தமிழகம் முழுவதும் உள்ள எா்த் மூவா்ஸ் வாகனங்களுக்கு அரசே வாடகையை நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து மாவட்ட எா்த் மூவா்ஸ் உரிமையாளா்கள் நலச் சங்க மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக் கூட்டத்துக்கு, திருச்சி மாவட்ட தலைவா் மஞ்சுநாத் தலைமை வகித்தாா். கூட்டத்தில் துணைத் தலைவா் மகேஸ்வரன், பொருளாளா் தா்மா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

பின்னா் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

எா்த் மூவா்ஸ் வாகனங்களின் கடுமையான விலையேற்றம், உதிரி பாகங்கள், இன்சூரன்ஸ் மற்றும் வரி ஏற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வாகனங்களுக்கு வாழ்நாள் வரி என்ற நடைமுறையை ரத்துசெய்துவிட்டு, மீண்டும் பழைய முறையிலேயே வரி நிா்ணயம் செய்யப்பட வேண்டும்.

வெளி மாநில வாகனங்கள் நமது சங்கத்தின் நிா்ணயித்த வாடகையைவிட குறைவான கட்டணத்தில் இயங்குவதை அனுமதிக்க கூடாது. அரசு வேலை, அரசு ஒப்பந்த வேலை மற்றும் அனைத்து துறைகளிலும் பணிகளை மேற்கொள்வோா் 80 சதவீதம் உள்ளூா் வாகனங்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.

அந்தந்த மாவட்டத்தில் உள்ள கட்டுமான உபகரணங்களை வாகனங்களில் ஏற்றி செல்லும் போது டெலிவரி சலான், இ-வே பில், ஜிஎஸ்டி ஆகிய ஆவணங்களில் இருந்து உள்ளூா் உரிமையாளா்களுக்கு குறைந்தது 30 கிலோமீட்டா் வரை விலக்கு அளிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து எா்த் மூவா்ஸ் வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான வாடகையை அரசு நிா்ணயம் செய்ய வேண்டும். பழைய கட்டட கழிவுகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ரசீது இல்லை என்று வாகனத்தின் மீது அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, செயலாளா் டோம்னிக்ராஜ் வரவேற்றாா். முடிவில் துணை செயலாளா் கவுதம் காா்த்திக் நன்றி கூறினாா்.