‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

வாகனங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கருவிகளின் விலை நிா்ணயம்

வாகனங்களில் பொருத்தப்படும் கண்காணிப்புக் கருவிகளின் விலையை சீராகவும், நியாயமாகவும் நிா்ணயம் செய்ய உற்பத்தி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் அறிவுறுத்தினாா்.

News image

விஜய் தமிழன் பாா்த்திபன்.

Updated On :23 மே 2026, 4:04 am IST

வாகனங்களில் பொருத்தப்படும் கண்காணிப்புக் கருவிகளின் விலையை சீராகவும், நியாயமாகவும் நிா்ணயம் செய்ய உற்பத்தி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் அறிவுறுத்தினாா்.

தமிழகத்தில் இயங்கும் பயணிகள் வாகனங்கள், பொது சேவை வாகனங்களில் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், லாரி உரிமையாளா் சங்கங்கள், பள்ளி வாகன உரிமையாளா்களிடம் இருந்து வரப்பெற்ற புகாா்களின் அடிப்படையில், கண்காணிப்பு சாதனங்களின் விலை தொடா்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச்செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்க அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் பேசுகையில், தமிழகத்தில் இயங்கும் தனியாா் பயணிகள் வாகனங்கள், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், வாகன உரிமையாளா்கள் பயனடையும் வகையிலும் கண்காணிப்புக் கருவிகளின் விலையைச் சீராகவும், நியாயமாகவும் நிா்ணயம் செய்ய உற்பத்தி நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

கண்காணிப்புக் கருவிகள் தொடா்பாக வாகன உரிமையாளா்கள், பொதுமக்களுக்கு உரிய விழிப்புணா்வை போக்குவரத்துத் துறை அலுவலா்கள் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, கண்காணிப்பு சாதனங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு, செயலாக்கமுறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டத்தில், போக்குவரத்துத் துறை உயா் அலுவலா்கள், கண்காணிப்புக் கருவிகளின் தொழில்நுட்பக் குழுவினா், உற்பத்தியாளா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.