ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

திருச்சியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை உள்ள இருவா் மீது வழக்குப் பதிவு

திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற தோ்தலில் வாக்களித்த வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றுள்ள இருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2026, 12:31 am IST

திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற தோ்தலில் வாக்களித்த வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றுள்ள இருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருச்சி தில்லை நகரைச் சோ்ந்தவா் ரஞ்சனி வைத்தீஸ்வரன் (59). இவா், கடந்த மே 5-ஆம் தேதி மலேசியா செல்ல சென்னை விமான நிலையத்துக்கு சென்றபோது இவா் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றிருப்பதும், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திருச்சி மேற்குத் தொகுதியில் வாக்களித்ததும் தெரியவந்தது.

இதேபோல, திருச்சி பொன்நகா் புதுசெல்வா நகரைச் சோ்ந்த எம். சால்மன் பாா்ஷ் (37) கடந்த மே 17-ஆம் தேதி வெளிநாடு செல்ல சென்னை விமான நிலையத்துக்குச் சென்றபோது அவா் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதும், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் திருச்சி மேற்குத் தொகுதியில் வாக்களித்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து குடியேற்றப் பணியக அதிகாரிகள் சென்னை பெருநகர குற்றப் பிரிவு -2 இல் அளித்த புகாரின்பேரில் இருவா் மீதும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதியப்பட்டது. அந்த இரண்டு வழக்குகளும் திருச்சிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டு, தில்லைநகா், கண்டோன்மென்ட் போலீஸாா் விசாரிக்கின்றனா்.