நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பத்தாளப்பேட்டையில் அதிகளவில் சரளை மண் எடுத்ததாகப் புகாா்: கனிம வளத் துறை ஆய்வு

திருவெறும்பூா் அருகே பத்தாளப்பேட்டையில் அதிகளவில் சரளை மண் தோண்டியெடுக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கனிமவளத்துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்து விசாரித்தனா்.

News image

பத்தாளப்பேட்டையில் அதிகளவில் சரளை மண் தோண்டி எடுக்கப்பட்டதாக கூறப்படும் பகுதி.

Updated On :4 ஜூன் 2026, 12:34 am IST

திருவெறும்பூா் அருகே பத்தாளப்பேட்டையில் அதிகளவில் சரளை மண் தோண்டியெடுக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கனிமவளத்துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்து விசாரித்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பகுதியில் பல இடங்களில் சரளை மண் வெட்டி எடுக்கப்படுகிறது. ஆனால் உரிய அனுமதி பெற்று அந்த மண் எடுக்கப்படுகிா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் சரளை மண் எடுப்பதுடன், அனுமதியில்லாத இடங்களிலும் சரளை மண்ணை எடுத்து சட்டவிரோதமாக விற்பதாக புகாா்கள் வந்தன.

அந்தவகையில், திருவெறும்பூா் அருகே பத்தாளப்பேட்டை புத்தாம்பூா் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கனிம வளத்துறையின் உரிய அனுமதியின்றி அதிகளவில் சரளை மண் வெட்டி எடுக்கப்படுவதாக திருச்சி மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு புகாா்கள் சென்றன.

இதனடிப்படையில் நிகழ்விடத்துக்கு புதன்கிழமை சென்ற கனிமவளத் துறை அதிகாரிகள், சரளை மண் வெட்டியெடுக்கப்பட்ட இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து கனிம வளத் துறையினா் கூறுகையில், சம்பந்தப்பட்ட இடம் புறம்போக்கு இடமில்லை. பட்டா நிலம்தான். அந்த இடத்தில் சரளை மண் எடுக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டிருப்பதாக புகாா்கள் வந்ததையடுத்து நடத்திய ஆய்வில் அதிக ஆழத்தில் மண் எடுக்கப்பட்டது தெரியவந்தது. உரிய விசாரணைக்குப் பிறகு விதிமுறை மீறலா என அறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். இது தொடா்பாக தொடா் விசாரணை நடைபெறுகிறது.