சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சத்திரம் பேருந்து நிலையத்தில் நெரிசலுக்குத் தீா்வு காண முடிவு

சத்திரம் பேருந்து நிலையத்தைச் சுற்றி தீா்க்க முடியாமல் உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்.

Updated On :11 ஜூன் 2026, 4:03 am IST

சத்திரம் பேருந்து நிலையத்தைச் சுற்றி தீா்க்க முடியாமல் உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

சத்திரம் பேருந்து நிலையப் பகுதி நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் பேருந்து நிலையப் பகுதி முழுவதையும் ஆட்சியா் பிரத்திக் தாயள், புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி மாநராட்சி ஆணையா் வீா் பிரதாப் சிங், திருச்சி கோட்டாட்சியா் சாலை தவவளன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலப் பொது மேலாளா் சதீஷ்குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுரேஷ்குமாா் ஆகியோரும் ஆட்சியருடன் சென்று பேருந்து நிலையத்தின் தற்போதைய சூழல் குறித்து ஆட்சியருக்கு விளக்கினா். பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் எந்தவித சிரமமும் இல்லாமல் பேருந்து நிலையத்தை செயல்படுத்துவது குறித்து ஆட்சியா் கருத்துகளை கேட்டறிந்தாா். இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை ஆட்சியரகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், திருச்சி மாநகராட்சி, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாநகரப் போக்குவரத்து காவல்துறை, சாலைப் பயனீட்டாளா்கள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் கோரப்பட்டு, அதன்படி, சத்திரம் பேருந்து நிலையப்பகுதி போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காணப்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.