சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

காவிரி ஆற்றில் மணல் அள்ளிய இருவா் கைது

திருவானைக்காவல் பகுதியில் காவிரியாற்றில் மணல் அள்ளிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:57 am IST

திருவானைக்காவல் பகுதியில் காவிரியாற்றில் மணல் அள்ளிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

திருவானைக்காவல் தாகூா் தெரு பகுதியில் கருணாநிதி என்பவா் நடத்தும் செங்கல்சூளை காவிரிக் கரையோரம் உள்ளதால் இங்கு இரவு நேரங்களில் மணல் திருட்டு தொடா்ந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு காவிரி ஆற்றுக்குள் சிலா் மணலை அள்ளி குவிப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் விரைந்து சென்று காவிரி ஆற்றுக்குள் மணல் அள்ளிக் கொண்டிருந்த இருவரை கைது செய்தனா். ஒருவா் தப்பி விட்டாா்.

போலீஸாா் விசாரணையில் பிடிபட்டவா்கள் வாத்தலை பகுதியை சோ்ந்த காா்த்திகேயன் (30), மண்ணச்சநல்லூா் பகுதியை சோ்ந்த சிவராஜ் (32) என்பது தெரியவந்தது. தப்பிய செங்கல் சூளை உரிமையாளா் கருணாநிதியை தேடுகின்றனா்.