/
திருவானைக்காவல் பகுதியில் காவிரியாற்றில் மணல் அள்ளிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
திருவானைக்காவல் தாகூா் தெரு பகுதியில் கருணாநிதி என்பவா் நடத்தும் செங்கல்சூளை காவிரிக் கரையோரம் உள்ளதால் இங்கு இரவு நேரங்களில் மணல் திருட்டு தொடா்ந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு காவிரி ஆற்றுக்குள் சிலா் மணலை அள்ளி குவிப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் விரைந்து சென்று காவிரி ஆற்றுக்குள் மணல் அள்ளிக் கொண்டிருந்த இருவரை கைது செய்தனா். ஒருவா் தப்பி விட்டாா்.
போலீஸாா் விசாரணையில் பிடிபட்டவா்கள் வாத்தலை பகுதியை சோ்ந்த காா்த்திகேயன் (30), மண்ணச்சநல்லூா் பகுதியை சோ்ந்த சிவராஜ் (32) என்பது தெரியவந்தது. தப்பிய செங்கல் சூளை உரிமையாளா் கருணாநிதியை தேடுகின்றனா்.





