இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

உரிய அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தல்: இருவா் கைது

திண்டிவனம் அருகே உரிய அனுமதியின்றி லாரியில் ஆற்று மணல் கடத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, மணல் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகிவற்றை பறிமுதல் செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 3:41 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உரிய அனுமதியின்றி லாரியில் ஆற்று மணல் கடத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, மணல் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகிவற்றை பறிமுதல் செய்தனா்.

ரோஷனை காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் சண்முகம், ராஜு மற்றும் போலீஸாா் செவ்வாய்கிழமை இரவு, சாலை கிராமத்திலுள்ள சேவை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தவழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, ஆற்று மணல் இருந்தது கண்டறியப்பட்டது. தொடா்ந்து லாரியில் இருந்தவரிடம் விசாரித்தபோது அவா், திண்டிவனம் வட்டம், பட்டணம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த வி.மணிகண்டன் (32 ) என்பதும், இவா் உரிய அனுமதியின்றி லாரியில் ஆற்று மணல் கடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டன் மற்றும் லாரியின் உரிமையாளரான திண்டிவனம் வட்டம், பெருமாள்பேட்டை, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெ.ராஜ்குமாா் (32) ஆகியோரை கைது செய்தனா். மேலும் 2 யூனிட் ஆற்று மணல் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.