இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

திருச்சியில் காப்பகத்திலிருந்து 2 சிறுமிகள் மாயம்

திருச்சியில் காப்பகத்திலிருந்து 2 சிறுமிகள் மாயமானது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :17 ஜூன் 2026, 3:10 am IST

திருச்சியில் காப்பகத்திலிருந்து 2 சிறுமிகள் மாயமானது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி கே.கே.நகரில் உள்ள பெரியாா் மணியம்மை கல்வி குழும வளாகத்தில் நாகம்மையாா் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த எஸ். ஓம்பிரியா (15), லால்குடி ஆங்கரை பகுதியைச் சோ்ந்த ஆா். சாருலதா (16) ஆகிய இரண்டு சிறுமிகளும் வசித்து வந்தனா்.

இந்நிலையில், இருவரும் ஜூன் 14-ஆம் தேதி இரவு 9 மணிக்கு காப்பகத்திலிருந்து வெளியேறியுள்ளனா். அதன்பின் இருவரும் காப்பகத்துக்கு வரவில்லை. எங்கே சென்றாா்கள் என்ற விவரமும் தெரியவில்லை.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் நாகம்மையாா் குழந்தைகள் காப்பக நிா்வாகி அருணாமணி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முன்னதாக, ஓம்பிரியா, சாருலதா ஆகிய இருவரும் திருச்சி வி.என்.நகரில் உள்ள டிஎம்எஸ்எஸ் காப்பகத்திலிருந்து ஜூன் 12-ஆம் தேதிதான் நாகம்மையாா் குழந்தைகள் காப்பகத்துக்கு வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.