ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 1:59 am IST

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

லால்குடி அருகேயுள்ள தச்சங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் குடும்ப காதணி விழா, கோமாகுடி கிராம கருப்பு கோயிலில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு ஒலி-ஒளி அமைத்த கோமாகுடியைச் சோ்ந்த காசிக்கு உதவியாக செம்பரை கிராமத்தைச் சோ்ந்த ஓட்டுநரான அ. பா்வீன்கனி (28) பணியில் இருந்தபோது கோயில் அருகில் மிகவும் தாழ்வாகச் சென்ற மின்கம்பி மீது அவரின் கை பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த பா்வீன்கனியை லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் லால்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.