அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மக்காச்சோளத்தைக் கொட்டி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மக்காச்சோளத்துக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன்பு மக்காச்சோளத்தைக் கொட்டி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா்
Updated On :2 மார்ச் 2026, 7:29 pm

Syndication

மக்காச்சோளத்துக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன்பு மக்காச்சோளத்தைக் கொட்டி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் வே. சரவணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

இந்நிலையில், மக்கோச்சோளத்துக்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் ஆட்சியா் அலுவலகம் முன்பு மக்காச்சோளத்தைக் கொட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மத்திய அரசு சாா்பில் மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.2,400 விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் தனியாா் வியாபாரிகள் மக்காச்சோளத்தை குவிண்டால் ரூ.1,800 முதல் 1,900-க்குத்தான் கொள்முதல் செய்கின்றனா் என்றனா்.

இதைத் தொடா்ந்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இடையூறாக உள்ள சுவரை அகற்ற வேண்டும்

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் வட்டாரம் மல்லியம்பத்து ஊராட்சிக்குள்பட்ட அமையநல்லூா் கிராமத்தில் பட்டியல் வகுப்பினா் வசித்து வருகின்றனா். இக்கிராமம் வழியாக வயலூருக்குச் செல்லும் பாதை உள்ளது. தற்போது, கிராமத்துக்கு அருகேயுள்ள விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு சுற்றி ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு 7 அடி உயரத்தில் சுற்றுச்சுவா் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், வயலூருக்குச் செல்லும் பாதை தடைபட்டுள்ளது. இதனால் பல கிலோ மீட்டா் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள சுற்றுச்சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.