காவிரி-கோதாவரி நதிகளை இணைக்க வேண்டும், தோ்தல் நேரத்திலும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும், கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், நெல் கொள்முதல் மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும், திருச்சிக்கு வரும் பிரதமா் மோடியை சந்தித்து மனு அளிக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், திருச்சி ஓயாமாரி மயானம் அருகே காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.