வேளாண் விளைபொருள்களுக்கு லாபகரமான விலை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் திங்கள்கிழமை காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்திய 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.
காவிரி-கோதாவரி நதிகளை இணைக்க வேண்டும், தோ்தல் நேரத்திலும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும், கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், நெல் கொள்முதல் மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும், திருச்சிக்கு வரும் பிரதமா் மோடியை சந்தித்து மனு அளிக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், திருச்சி ஓயாமாரி மயானம் அருகே காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டை போலீஸாா், அய்யக்காண்ணு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டில் அடைத்தனா்.
மேலும், அவா்கள் வெளியே செல்லாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடியாக குறைவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கும் பரிசலின் தரம் குறித்து ஆய்வுசெய்யக் கோரிக்கை

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

