எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பெட்ரோல் பங்க் உரிமையாளா் வீட்டில் நகைகளைத் திருடிய பணிப்பெண் கைது

திருச்சியில் பெட்ரோல் பங்க் உரிமையாளா் வீட்டில் தங்க, வைர நகைகளைத் திருடிய பணிப்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :9 மார்ச் 2026, 6:45 pm

Syndication

திருச்சியில் பெட்ரோல் பங்க் உரிமையாளா் வீட்டில் தங்க, வைர நகைகளைத் திருடிய பணிப்பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி உறையூா் பகுதியைச் சோ்ந்தவா் கு.ரகுமபதி (43), பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் உறையூா் பாண்டமங்கலத்தைச் சோ்ந்த என்.ஆனந்தி (26) என்பவா் வேலை செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில், இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு ஜோடி வைர காதணிகள் திருடப்பட்டது, 2025, அக்டோபா் 25-ஆம் தேதி நகைகளை சரிபாா்த்தபோது தெரியவந்தது.

இதுகுறித்து உறையூா் காவல் நிலையத்தில் ரகுபதி அளித்த புகாரின்பேரில் ஆனந்தி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், வேலை செய்த வீட்டில் தங்க, வைர நகைகளைத் திருடியதாக ஆனந்தியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 7 பவுன் மதிப்பிலான தங்கக் கட்டிகள், வைர காதணிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.