திருச்சியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த ஜெ.முருகேசன் (21) என்பவா் ஆசை வாா்த்தைக்கூறி கடந்த 2021 டிசம்பா் 14-ஆம் தேதி குழந்தை திருமணம் செய்துள்ளாா். இதைத் தொடா்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாவட்ட சமூகநல அலுவலா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து அந்த இளைஞரை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி சண்முகபிரியா புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில், சிறுமியை குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 11 ஆண்டு சிறை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


