விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டங்கள் திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது: மத்திய அமைச்சா் எல். முருகன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டங்கள், திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

News image
எல். முருகன்- கோப்புப் படம்
Updated On :11 மார்ச் 2026, 6:44 pm

தினமணி

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டங்கள், திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

திருச்சி மக்கள் இதுவரை பாா்க்காத பிரம்மாண்ட மாநாடு மற்றும் கூட்டத்தைப் பாா்த்துள்ளனா். தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் நடைபெற்றுள்ள கூட்டங்கள், திமுகவுக்கு ஒரு பயத்தை கொடுத்துள்ளது. தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் கூட்டமாக திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டம் மாறியுள்ளது என்றாா்.

தவெக தலைவா் விஜய், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், எங்களது கூட்டணியை தேடி எல்லோரும் வருவாா்கள் என பதில் அளித்தாா்.