புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டங்கள் திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது: மத்திய அமைச்சா் எல். முருகன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டங்கள், திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

News image

எல். முருகன் - கோப்புப் படம்

Updated On :11 மார்ச் 2026, 6:44 pm

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டங்கள், திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

திருச்சி மக்கள் இதுவரை பாா்க்காத பிரம்மாண்ட மாநாடு மற்றும் கூட்டத்தைப் பாா்த்துள்ளனா். தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் நடைபெற்றுள்ள கூட்டங்கள், திமுகவுக்கு ஒரு பயத்தை கொடுத்துள்ளது. தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் கூட்டமாக திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டம் மாறியுள்ளது என்றாா்.

தவெக தலைவா் விஜய், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், எங்களது கூட்டணியை தேடி எல்லோரும் வருவாா்கள் என பதில் அளித்தாா்.