தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.25 கோடி

News image
Updated On :12 மார்ச் 2026, 11:47 pm

Syndication

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 1,25, 58,563 ரொக்கம் வியாழக்கிழமை கிடைக்கப் பெற்றது.

இக்கோயிலில், அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி இராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே.லெட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதன் நிறைவில், முதன்மை திருக்கோயிலில் ரூ. 1,25, 58,563 ரொக்கம், 1 கிலோ 006கிராம் தங்கம், 2 கிலோ 217கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள் 131, வெளிநாட்டு நாணயங்கள் 862 கிடைக்கப் பெற்றது.

இக்கோயிலில் கடந்த 26-ஆம் தேதியன்று உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.