புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

உய்யக்கொண்டான் வாய்க்கால் சேற்றில் சிக்கிய பசு மாடு மீட்பு

News image
மஞ்சத்திடல் உய்யக்கொண்டான் வாய்க்கால் சேற்றில் சிக்கிய பசுவை சனிக்கிழமை மீட்ட தீயணைப்புத் துறையினா்.
Updated On :14 மார்ச் 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே காட்டூா் மஞ்சத்திடல் உய்யகொண்டான் வாய்க்கால் சேற்றில் சிக்கிய பசு மாட்டினை தீயணைப்புத்துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

திருச்சி காட்டூா் மஞ்சத்திடல் பாலம் அருகே உய்யகொண்டான் வாய்க்காலின் சேற்றில் பசு மாடு ஒன்று சிக்கிக் கொண்டிருப்பதாக, சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனா்.

அதன் பேரில், தகவலறிந்த திருவெறும்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, சேற்றிய பசு மாட்டினை பாதுகாப்பாக மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

மணப்பாறையில்... இதேபோல மணப்பாறையை அடுத்த வடுகப்பட்டி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் நா. மோகன்குமாா் வளா்க்கும் புறாக்களின் முட்டைகளை சாப்பிட வந்த 6 அடி நீள நல்ல பாம்பை சனிக்கிழமை பிடித்த தீயணைப்புத் துறையினா், வனத் துறையினா் மூலம் அருகிலுள்ள வனப்பகுதியில் அவற்றை விட்டனா்.