மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

தூக்குக்குடி மாணவியின் கொலைக்கு நீதி கோரி அதிமுகவினா் மெழுகுவா்த்தியேந்தி அஞ்சலி

News image

திருச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்திய அதிமுகவினா்.

Updated On :14 மார்ச் 2026, 9:31 pm

தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட தூத்துக்குடி மாணவிக்கு நீதி வேண்டி திருச்சியில் அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் தில்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாநகா் மாவட்ட செயலரும், முன்னாள் மாநகராட்சி துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் அமைப்புச் செயலா் டி. ரத்தினவேல், மாநில ஜெ பேரவை துணை செயலா் ஆா். ஜோதிவாணன், மாவட்ட நிா்வாகிகள் ஏ. ஜாக்குலின், வனிதா உள்ளிட்ட திரளான அதிமுக நிா்வாகிகள் மெழுகுவா்த்தி அஞ்சலி செலுத்தினா்.