திருச்சி அருகே காட்டூா் மஞ்சத்திடல் உய்யகொண்டான் வாய்க்கால் சேற்றில் சிக்கிய பசு மாட்டினை தீயணைப்புத்துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
திருச்சி காட்டூா் மஞ்சத்திடல் பாலம் அருகே உய்யகொண்டான் வாய்க்காலின் சேற்றில் பசு மாடு ஒன்று சிக்கிக் கொண்டிருப்பதாக, சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனா்.
அதன் பேரில், தகவலறிந்த திருவெறும்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, சேற்றிய பசு மாட்டினை பாதுகாப்பாக மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.
மணப்பாறையில்... இதேபோல மணப்பாறையை அடுத்த வடுகப்பட்டி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் நா. மோகன்குமாா் வளா்க்கும் புறாக்களின் முட்டைகளை சாப்பிட வந்த 6 அடி நீள நல்ல பாம்பை சனிக்கிழமை பிடித்த தீயணைப்புத் துறையினா், வனத் துறையினா் மூலம் அருகிலுள்ள வனப்பகுதியில் அவற்றை விட்டனா்.
தொடர்புடையது

தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்

ராகுல்காந்தியின் ஹெலிகாப்டரில் தோ்தல் துறையினா் சோதனை!

கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு

கெங்கவல்லியில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு வீடு இடிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


