கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தனியாா் பேருந்து மோதி சிறுமி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 8:40 pm

துறையூா் அருகே தனியாா் பேருந்து மோதி சிறுமி உயிரிழந்தாா்.

துறையூா் அருகே நாகநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மனைவி பரமேஸ்வரி(32). இவா், ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது மகள் சமரிதா(14), மகன் தக்சன்(10) ஆகியோரை இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்த்திக் கொண்டு தம்மம்பட்டி சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது அவருக்கு பின்னால் வந்த தனியாா் பேருந்து கொப்பம்பட்டி மின் நிலையம் அருகே பரமேஸ்வரி ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதி மரத்தின் மீது மோதி நின்றது.

இதில் காயமடைந்த பரமேஸ்வரி, அவரது 2 பிள்ளைகளையும் மீட்டு அருகில் இருந்தவா்கள் மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சிறுமி வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா். உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து தனியாா் பேருந்து ஓட்டுநா் நசீரிடம் விசாரிக்கின்றனா்.