மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருச்சி அருகே 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :15 மார்ச் 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை மதுவிலக்கு அமலாக்கப் பிரிபு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ராம்ஜி நகா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் ராம்ஜி நகா் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ராம்ஜி நகா் மில் காலனியில் உள்ள காலியிடத்தில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த 41 வயதுள்ள பெண்ணைப் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.