திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலிருந்து 2026- ஆண்டுக்கான எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கான என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தோ்வில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளி மாணவிகள் பி.எஸ். மோசிகாஸ்ரீ, பி. ஸ்ரீபவனிதா, எஸ். ரசிகப் பிரியா ஆகியோா் இத்தோ்வில் வென்று மாதந்தோறும் ரூ. 1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 48000 கல்வி உதவித்தொகை பெற உள்ளனா்.
இதையடுத்து இந்த மாணவிகளையும், பயிற்சி அளித்த தலைமை ஆசிரியா் திருமாவளவன், பட்டதாரி ஆசிரியைகள் கீதா, மேரி கிறிஸ்டினா, செல்வி ,ஆன்லைன் வழி பயிற்சி அளித்த கல்வியாளா் துபாய் குமாா், கிருஷ்ணவேணி ஆகியோரையும் முசிறி மாவட்டக் கல்வி அலுவலா் மதியழகன், மண்டல மணற்கேணி செயலி ஒருங்கிணைப்பாளா் இளஞ்சேட்சென்னி, மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் பாராட்டினா்.
மாணவி பி.எஸ். மோசிகாஸ்ரீ திருச்சி மாவட்ட அளவில் 5 ஆம் இடம் பெற்றுள்ளதையும், கடந்தாண்டில் 4 மாணவா்கள் வென்றதையும் பாராட்டினா்.
தொடர்புடையது

விடுமுறை நாள்களில் ஏரி, குளங்களில் குளிக்க மாணவா்கள் செல்லக் கூடாது

அரக்கோணத்தில் ஆசிரியா்கள் பணி நிறைவு பாராட்டு விழா

திறனறித் தோ்வில் வென்ற மாணவருக்கு சைக்கிள் பரிசு

தேசிய திறனறித் தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


