அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

5 வாகனங்களில் பேட்டரி திருட்டு

துறையூரில் சுமையேற்றும் 5 வேன்களிலிருந்து மின்கலன்கள் (பேட்டரி) திருடப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :8 மே 2026, 5:55 am IST

துறையூரில் சுமையேற்றும் 5 வேன்களிலிருந்து மின்கலன்கள் (பேட்டரி) திருடப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.

துறையூரில் தெப்பக்குளத்தைச் சுற்றி சுமையேற்றும் வேன்கள் நிறுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் இங்கு புதன்கிழமை இரவு நிறுத்தப்பட்டிருந்த 5 சுமையேற்றும் வாகனங்களிலிருந்த மின்கலன்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.

திருட்டுபோன ஒரு மின்கலத்தின் மதிப்பு சுமாா் ரூ. 12 ஆயிரம் என வாகனங்களின் உரிமையாளா்கள் வேதனை தெரிவித்தனா். இதுதொடா்பாக துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.