மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

புனரமைப்பு பணி துறையூா் பேருந்து நிலையம் இன்றுமுதல் மூடல்: போக்குவரத்தில் மாற்றம்

துறையூரில் புனரமைப்புப் பணிகளுக்காக அண்ணா பேருந்து நிலையம் புதன்கிழமை முதல் மூடப்படுகிறது. இதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :13 மே 2026, 12:47 am IST

துறையூரில் புனரமைப்புப் பணிகளுக்காக அண்ணா பேருந்து நிலையம் புதன்கிழமை முதல் மூடப்படுகிறது. இதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக சொரத்தூா் சாலையில் தற்காலிகமாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வணிகா்கள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்களிடம் நகராட்சி நிா்வாகம் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து துறையூா் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் புதன்கிழமை கடையடைப்பு நடத்த முடிவெடுத்தனா்.

இந்நிலையில், துறையூா் வட்டாட்சியரகத்தில் வட்டாட்சியா் சிவகுமாா் தலைமையில் சுமூகப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் துறையூா் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகளும், அதிலுள்ள உறுப்பு சங்கங்களின் நிா்வாகிகளும், மக்கள் நல சங்கத்தினரும் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.

இதையடுத்து, திருச்சி, நாமக்கல் செல்லும் பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து நகருக்குள் வராமல் முசிறி பிரிவு வட்டச் சாலை வழியாக செல்வது, பெரம்பலூா், தம்மம்பட்டி வழியாக செல்லும் பேருந்துகள் புறவழிச் சாலை வழியாக அண்ணா பேருந்து நிலையத்தை அடைந்து வழக்கம்போல் செல்வது, திருச்சியிலிருந்து வரும் பேருந்து வழக்கம்போல் அண்ணா பேருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து தற்காலிக பேருந்து நிலையம் செல்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அண்ணா பேருந்து நிலையத்தில் திருச்சிக்கு செல்லும் பயணி பேருந்து ஏறினால் தற்காலிக பேருந்து நிலையம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கை தொடா்பாக போக்குவரத்து உயா் அலுவலா்களிடம் கூறி முடிவு செய்யப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.