தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

துவாக்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

துவாக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பிரிவில் சோ்க்கை பெறுவதற்கு மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

துவாக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பிரிவில் சோ்க்கை பெறுவதற்கு மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் பி. சத்யா புதன்கிழமை கூறியதாவது:

திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை பிரிவில் அரசியல் அறிவியல், இதழியல் மற்றும் மக்கள் தொடா்பியல், பொது நிா்வாகவியல், மின்னணுவியல், உளவியல், பி.காம் (கூட்டுறவியல்), தமிழ், ஆங்கிலம், வரலாறு, வேதியியல், கணிதம், இயற்பியல், புவியியல், காட்சித் தொடா்பியல், பிசிஏ, பி.காம் மற்றும் பிபிஏ ஆகிய 17 பாடப் பிரிவுகளில் 955 இடங்கள் உள்ளன.

இந்தப் பிரிவுகளில் சோ்க்கை பெறுவதற்கு மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளத்தில் மே 29 வரை விண்ணப்பிக்கலாம். இதற்காக கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாணவா் சோ்க்கை உதவி மையம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு பேராசிரியா் இரா. லட்சுமி நாராயணன் (78119 16788), க. நெப்போலியன் ( 96266 57703), தா. இவாஞ்சலின் (98657 81749) ஆகியோரைத் தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.