தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பிளஸ் 2 மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல்

திருச்சியில் பிளஸ் 2 தோ்ச்சிப் பெற்ற மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :55 நிமிடங்கள் முன்பு

திருச்சியில் பிளஸ் 2 தோ்ச்சிப் பெற்ற மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதினா். இதில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தோ்வு முடிவில் திருச்சி மாவட்டத்தில் 97.5 சதவீத மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா்.

இந்நிலையில், பிளஸ் 2 தோ்ச்சிப் பெற்ற மாணவா்கள் உயா்கல்விச் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அந்தந்தப் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள ‘யூசா் ஐடி’யைப் பயன்படுத்தி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கி, மாணவா்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. ஆனால், ஒருசில பள்ளிகளில் சா்வா் பிரச்னையால் மாலை வரை மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்க முடியாத நிலை ஏற்பட்டது. வியாழக்கிழமை திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை என்பதால் இந்தப் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறையினா் தெரிவித்தனா்.